கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுவர்களுக்கு ஏற்படும் அலர்ஜி தொடர்பான ஆய்வு பணியை தொடங்கியிருப்பதாக அமெரிக்க அறிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
ஃபஸர் பையோன்டெக், மடர்னா தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்திகொண்ட பலருக்கு அலர்ஜி போன்ற உடல் உபாதை ஏற்பட்டிருக்கிறது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட 15 நிமிடங்களில் அலர்ஜி காணப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே இதுதொடர்பான ஆய்வை அமெரிக்கா தொடங்கியுள்ளது.